நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமென் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யவும், அனிதா தற்கொலைக்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டி வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.



விமன் இந்தியா மூமெண்ட்டின் மாவட்ட தலைவர்  ஃப்ரீத்தா பேகம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளே அனிதா மரணத்திற்கு காரணம் என்றும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...