தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்காக அரசு ஊழியர்களால் ஆட்சியர் அலுவலகத்தில் இரவு உணவு சமைக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் அவ்வப்போது மழை பெய்ந்த நிலையிலும் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்காக அரசு ஊழியர்களால் ஆட்சியர் அலுவலகத்தில் இரவு உணவு சமைக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் அவ்வப்போது மழை பெய்ந்த நிலையிலும் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.