ராஜவாய்க்காலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளையும் மீட்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?


கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதனடிப்படையில், கோவை போத்தனூர் அருகே உள்ள அணைமேடு, முத்துகாலனி, சேரன் நகர், அண்ணா காலனி, உக்கடம், பெரியகுளம், தெற்கு கரை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடந்த நடவடிக்கையின் மூலம்  1000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

இதனால், கோயம்புத்தூர் மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. 

இந்நிலையில், கோவையில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :-



சிங்காநல்லூர் குளம் மற்றும் வாய்க்காலில் சுமார் 1500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பேரூர் பெரிய குளத்தில் விவசாய  நிலங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. செல்வம்பதி குளம் மற்றும் குமாரசாமி குளத்தில்  சுமார் 3500 வீடுகள்  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு நுகர்வோர் தானியக் கிடங்கு,விவசாய பல்கலைக்கழகம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.கோயமுத்தூர் அணைக்கட்டு எனும் தேவிசிறை தடுப்பணை நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 530 அடி அகலம் கொண்ட அணையானது 150 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செங்குளம் விவசாய நிலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.





போத்தனூர் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ராஜவாய்க்கால் மீட்கப்படுவதைப் போல, மேற்கண்ட ஆக்கிரமிப்பு நீர்நிலைகளும் மாநகராட்சியால் மீட்டெடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...