இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்து பெற்ற கோவை சிறுமி


தனது தொடர் சாதனைகளுக்காக இங்கிலாந்து ராணியிடம் கோவையை சேர்ந்த சிறுமி வாழ்த்து பெற்றுள்ளார் கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி தர்ஷினி. கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகள் தர்ஷினி, கணுவாய் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். 

ஸ்கேட்டிங் விளையாட்டில் பலே கில்லாடியான இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 



மேலும், 41 நிமிடங்களில் 10.5 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் செய்து "ஆசியா சாதனையாளர்கள் புத்தகம்"(Asia book of records) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்த சாதனையை தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ விருதினை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது இந்த சாதனைச் சுட்டியின் எதிர்கால லட்சியமாக உள்ளது. 

தர்ஷினியின் சாதனைகளை செய்தித்தொகுப்பாக சிம்ப்ளிசிட்டி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தனது சாதனைகளை ஒரு கடிதம் மூலம் இங்கிலாந்து மகாராணிக்கு அனுப்பியுள்ளார் தர்ஷினி. 



இதைப்பார்த்த ராணி, தர்ஷினியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தனது கையொப்பமிட்டதுடன் தனது இரு புகைப்படங்களையும் தர்ஷினிக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.





Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...