பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய சிறு, குறு நிறுவனத்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ்சிங். இவர் தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், நாளை (13,09,2017) நீலகிரி மாவட்டத்திற்கு செல்கிறார். முதலில் உதகையில் விருந்தினர் மாளிகையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதைத் தொடர்ந்து, குன்னூரில் நடக்கும் 12-வது யூ.பி.ஏ.எஸ்.சி ஆண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.