கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் ஒசூர் ரோடு, ஆத்ரா ஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் குத்துவிக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தார். கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் தலைவர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். துணைத் தலைவர் முத்துகுமார் வைர விழா கொண்டாட்டத்தில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் பற்றிய விரிவுரையை எடுத்துரைத்தார்.



பின்னர், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழாவின் முத்திரை சின்னத்தை அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டார்.



அதனைத் தொடர்ந்து, டிப்ளமோ தர மேலாண்மை படிப்பிற்கான புதிய கோர்ஸ் சங்கத்தின் சார்பில் துவங்கப்பட்டது. இதுகுறித்து கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் மற்றும் டிப்ளமோ தர மேலாண்மை கோர்ஸ் குழுவின் தலைவர் ஸ்ரீனிவாசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக டீன் சரவண செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டிப்ளமோ தர மேலாண்மை படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.



பின்னர், டிப்ளமோ முதுகலை பட்டப்படிப்பில் பயின்ற 30 மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் உறுப்பினர் விவேக் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கொடிசியா தலைவர் சுந்தரம் மாணவர்கள் மத்தியில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். பின்னர், அனைவருக்கும் பட்டமளிப்பு சான்றிதழை வழங்கி கெளரவித்தார். இறுதியில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.



இந்நிகழ்வில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...