வாகன ஓட்டிகள் எப்போதும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செப்டம்பர் 6 ம் தேதி முதல் அமலானது. இத்துடன் புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து வாகன விற்பனை முகவர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்ல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும், இது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து வாகன விற்பனை முகவர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்ல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும், இது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.