வீட்டு வசதி வாரிய வீடுகள் பெற வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் கட்டியும் தற்போது வரை பத்திரம் கொடுக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வட்டிக்குமேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வாயில் கருப்பு துணிகட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கணபதி மாநகர் மற்றும் உப்பிலிபாளையம் உட்பட பல பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தால் 1991- 1992 ஆம் ஆண்டுகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேப்போல தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் 37,000 வீடுகளுக்கு பத்திரம் வழங்கப்படால் இழுத்தடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் அப்போதே முழுத்தொகையை கொடுத்தும் இதுவரை பத்திரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் அளித்தவர் அதிக தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததையடுத்து அவருக்கு பணம் கொடுக்க பயனாளிகளிடம் அதிக தொகை கேட்டுள்ளனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பயனாளிகள் வழக்கு தொடர்ந்ததில் 6000 ரூபாய் சென்ட்க்கு கட்டினால் போதும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தொகையை கட்ட பயனாளிகள் தயாராக இருந்தும் வீட்டு வசதி வாரியம் சென்ட்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கேட்பதாகவும், 1995 லிருந்து 2001 வரை இதற்கான வட்டியை கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதா, வருடத்திற்கு ஐந்து மாதம் கழித்துவிட்டு மீதி வட்டியை கட்ட ஆணை பிறப்பித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசு அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு பணம் கட்டுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், வட்டிக்கு மேல் வட்டி போட்டு பயனாளிகளை துன்புறுத்துவதாகவும், 1992 ஆம் ஆண்டு வீடு வாங்கியவர்கள் பாதிபேர் இறந்து விட்டதாகவும், 25 ஆண்டுகளாக இன்னும் பட்டா கிடைக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புதுணி கட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டு சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...