குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வர வழிவகை செய்யும்படி திமுக கோவை மாநகர தெற்கு மாவட்டக் குழுவின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அது சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்வளமாகவும், குறிச்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏதுவாகவும் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நேரத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று வாய்க்காலை அடைத்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதும் குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து புட்டுவிக்கி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிச்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உடனடியாக குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அப்புறப்படுத்தி குளத்தில் தண்ணீர் தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...