கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வர வழிவகை செய்யும்படி திமுக கோவை மாநகர தெற்கு மாவட்டக் குழுவின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அது சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்வளமாகவும், குறிச்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏதுவாகவும் இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நேரத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று வாய்க்காலை அடைத்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதும் குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து புட்டுவிக்கி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிச்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அப்புறப்படுத்தி குளத்தில் தண்ணீர் தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அது சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்வளமாகவும், குறிச்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏதுவாகவும் இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நேரத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று வாய்க்காலை அடைத்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதும் குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து புட்டுவிக்கி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிச்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அப்புறப்படுத்தி குளத்தில் தண்ணீர் தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.