குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வர வழிவகை செய்யும்படி திமுக கோவை மாநகர தெற்கு மாவட்டக் குழுவின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அது சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்வளமாகவும், குறிச்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏதுவாகவும் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நேரத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று வாய்க்காலை அடைத்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதும் குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து புட்டுவிக்கி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிச்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உடனடியாக குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அப்புறப்படுத்தி குளத்தில் தண்ணீர் தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...