கோவை மாநகராட்சியைக் கண்டித்து வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி முடிவு

கோவை மாவட்ட தி.மு.க தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்றன.

பின்னர் கூட்டத்தில், கோவை மாநகராட்சி குப்பைகளுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகை வசூல் செய்வது உள்ளிட்ட ஆணைகளை உடனே ரத்து செய்யக் கோரி 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறியதாவது:- கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற அடிப்படையில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அளவிடுவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சேய்து வருகிறது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 18-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிளமேடு, குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சிங்காநல்லூர், பெரிய கடை வீதி, பாப்பநாயக்கன் புதூர் என அந்தெந்த பகுதிகளின் சார்பில் டவுன் ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...