கோவை மாநகராட்சியைக் கண்டித்து வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி முடிவு

கோவை மாவட்ட தி.மு.க தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்றன.

பின்னர் கூட்டத்தில், கோவை மாநகராட்சி குப்பைகளுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகை வசூல் செய்வது உள்ளிட்ட ஆணைகளை உடனே ரத்து செய்யக் கோரி 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறியதாவது:- கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற அடிப்படையில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அளவிடுவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சேய்து வருகிறது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 18-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிளமேடு, குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சிங்காநல்லூர், பெரிய கடை வீதி, பாப்பநாயக்கன் புதூர் என அந்தெந்த பகுதிகளின் சார்பில் டவுன் ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...