கோவையில் அரசுக்கு எதிராக செயல்படும் கேபிள் ஆபரேட்டர்கள் மீதும், மக்கள் விரும்பும் சேனல்களை வர விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கோவையில் அரசுக்கு போட்டியாக டிஜிகான், எஸ்.சி.வி, டி.சி.சி.எல்., மற்றும் பாலிமர் உள்பட் நான்கு ஆப்ரேட்டர்கள் தனியாக சேனல்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 7 லட்சம் இணைப்புள்ள கோவை மாநகரில் 1.50 லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே அரசுக்கு கணக்கு காட்டுகின்றனர். மேலும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது உரிமையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் சேனல்களை வரவிடாமல் இருட்டடிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கோவையில் அரசுக்கு போட்டியாக டிஜிகான், எஸ்.சி.வி, டி.சி.சி.எல்., மற்றும் பாலிமர் உள்பட் நான்கு ஆப்ரேட்டர்கள் தனியாக சேனல்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 7 லட்சம் இணைப்புள்ள கோவை மாநகரில் 1.50 லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே அரசுக்கு கணக்கு காட்டுகின்றனர். மேலும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது உரிமையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் சேனல்களை வரவிடாமல் இருட்டடிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.