நீட் தேர்வின் மூலம் பல் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள அருந்ததிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு, கல்விக் கடன் பெற்று தர அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியை சேர்ந்த கவுசல்யா, என்பவரது மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு, அப்பகுதியில் உள்ள தம்பு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்ருதி, நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவி ஸ்ருத்திக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் தாலம்பூர், ஸ்ரீ வெங்கஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால், கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தந்தை ஆதரவு இல்லாமல், தாயார் கூலி வேலைக்கு சென்று இதுவரை படித்து வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தி பல் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். எனவே கல்வி கடன் பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என மாணவி ஸ்ருதி வேண்டுகோள் விடுத்தார்
கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியை சேர்ந்த கவுசல்யா, என்பவரது மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு, அப்பகுதியில் உள்ள தம்பு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்ருதி, நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவி ஸ்ருத்திக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் தாலம்பூர், ஸ்ரீ வெங்கஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால், கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தந்தை ஆதரவு இல்லாமல், தாயார் கூலி வேலைக்கு சென்று இதுவரை படித்து வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தி பல் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். எனவே கல்வி கடன் பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என மாணவி ஸ்ருதி வேண்டுகோள் விடுத்தார்