நீட் தேர்வு அடிப்படையில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு மருத்துவ இடம் - கல்விக் கடன் கோரி ஆட்சியரிடம் மனு

நீட் தேர்வின் மூலம் பல் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள அருந்ததிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு, கல்விக் கடன் பெற்று தர அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியை சேர்ந்த கவுசல்யா, என்பவரது மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு, அப்பகுதியில் உள்ள தம்பு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்ருதி, நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். 

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவி ஸ்ருத்திக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் தாலம்பூர், ஸ்ரீ வெங்கஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால், கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தந்தை ஆதரவு இல்லாமல், தாயார் கூலி வேலைக்கு சென்று இதுவரை படித்து வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தி பல் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். எனவே  கல்வி கடன் பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என மாணவி ஸ்ருதி வேண்டுகோள் விடுத்தார்

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...