நீட் தேர்வு அடிப்படையில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு மருத்துவ இடம் - கல்விக் கடன் கோரி ஆட்சியரிடம் மனு

நீட் தேர்வின் மூலம் பல் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள அருந்ததிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு, கல்விக் கடன் பெற்று தர அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியை சேர்ந்த கவுசல்யா, என்பவரது மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு, அப்பகுதியில் உள்ள தம்பு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்ருதி, நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். 

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவி ஸ்ருத்திக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் தாலம்பூர், ஸ்ரீ வெங்கஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால், கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தந்தை ஆதரவு இல்லாமல், தாயார் கூலி வேலைக்கு சென்று இதுவரை படித்து வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தி பல் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். எனவே  கல்வி கடன் பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என மாணவி ஸ்ருதி வேண்டுகோள் விடுத்தார்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...