கோவை மாநகராட்சிக்கட்பட்ட குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட காவல் ஆணையாளரிடம், பொதுமக்கள் சார்பில் கோவை மாநகர் தெற்கு தி.மு.க. மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட உள்ள குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் பள்ளிக் கூடம் உள்ளது. முக்கிய வழிபாட்டு தலமான ஈச்சனாரி விநாயகர் மற்றும் சாய்பாபா கோவில்களும் அமைந்துள்ளன. மேலும், போத்தனூரில் நடக்கும் மேம்பால பணிகளால், தற்போது இந்த சாலையில் போக்குரவத்து அதிகம் ஏற்பட்டுள்ளது.

எனவே, செட்டிபாளையம் சாலையில் மதுபானக் கடை அமைந்துவிட்டால், குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும். மேலும், மதுபானக் கடை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலைமை ஏற்படும்.
ஆகவே, மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய மதுபானக் கடைகள் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட உள்ள குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் பள்ளிக் கூடம் உள்ளது. முக்கிய வழிபாட்டு தலமான ஈச்சனாரி விநாயகர் மற்றும் சாய்பாபா கோவில்களும் அமைந்துள்ளன. மேலும், போத்தனூரில் நடக்கும் மேம்பால பணிகளால், தற்போது இந்த சாலையில் போக்குரவத்து அதிகம் ஏற்பட்டுள்ளது.

எனவே, செட்டிபாளையம் சாலையில் மதுபானக் கடை அமைந்துவிட்டால், குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும். மேலும், மதுபானக் கடை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலைமை ஏற்படும்.
ஆகவே, மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய மதுபானக் கடைகள் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.