புதிதாக திறக்கப்படும் மதுபானக் கடையை தடுக்கக் கோரி பொதுமக்கள் மனு

கோவை மாநகராட்சிக்கட்பட்ட குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட காவல் ஆணையாளரிடம், பொதுமக்கள் சார்பில் கோவை மாநகர் தெற்கு தி.மு.க. மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட உள்ள குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் பள்ளிக் கூடம் உள்ளது. முக்கிய வழிபாட்டு தலமான ஈச்சனாரி விநாயகர் மற்றும் சாய்பாபா கோவில்களும் அமைந்துள்ளன. மேலும், போத்தனூரில் நடக்கும் மேம்பால பணிகளால், தற்போது இந்த சாலையில் போக்குரவத்து அதிகம் ஏற்பட்டுள்ளது. 



எனவே, செட்டிபாளையம் சாலையில் மதுபானக் கடை அமைந்துவிட்டால், குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும். மேலும், மதுபானக் கடை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலைமை ஏற்படும். 

ஆகவே, மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய மதுபானக் கடைகள் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...