கோவை மாவட்டம், பூண்டி அருகே யானை தாக்கியதில் ஈஷா யோகா மையத்தின் ஊழியர் உயிரிழந்தார்.
கோவையில், ஜக்கி வாசுதேவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா மையம். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பல ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் இம்மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் இந்த பகுதியானது யானைகள் வழித்தடப் பாதையாகவும், நீண்ட காலத்திற்கு முன்பு நீரோட்டப் பாதையாகவும் இருந்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும், அவ்வப்போது யானை தாக்குதலால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஐடி சிஸ்டம் அட்மினாக பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் மனீஷ்குமார் (24) சனிக்கிழமையன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈஷா மையத்தின் ஊழியர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் இன்று சென்னையில் அம்மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் "நதிகளை மீட்போம்" பிரம்மான்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
கோவையில், ஜக்கி வாசுதேவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா மையம். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பல ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் இம்மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் இந்த பகுதியானது யானைகள் வழித்தடப் பாதையாகவும், நீண்ட காலத்திற்கு முன்பு நீரோட்டப் பாதையாகவும் இருந்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும், அவ்வப்போது யானை தாக்குதலால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஐடி சிஸ்டம் அட்மினாக பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் மனீஷ்குமார் (24) சனிக்கிழமையன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈஷா மையத்தின் ஊழியர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் இன்று சென்னையில் அம்மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் "நதிகளை மீட்போம்" பிரம்மான்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.