யானை தாக்கி ஈஷா மைய ஊழியர் பலி !

கோவை மாவட்டம், பூண்டி அருகே யானை தாக்கியதில் ஈஷா யோகா மையத்தின் ஊழியர் உயிரிழந்தார்.

கோவையில், ஜக்கி வாசுதேவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா மையம். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பல ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் இம்மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் இந்த பகுதியானது யானைகள் வழித்தடப் பாதையாகவும், நீண்ட காலத்திற்கு முன்பு நீரோட்டப் பாதையாகவும் இருந்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும், அவ்வப்போது யானை தாக்குதலால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. 

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஐடி சிஸ்டம் அட்மினாக பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் மனீஷ்குமார் (24) சனிக்கிழமையன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈஷா மையத்தின் ஊழியர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் இன்று சென்னையில் அம்மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் "நதிகளை மீட்போம்" பிரம்மான்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...