கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கத்தில் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கூடங்குளம் அணு உலையில் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் மக்களுக்கு வீடுகள் கட்டுவதில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை முறைப்படி நடத்த வேண்டும். அணு உலையை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதால் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது :- நீட் தேர்வு என்பது குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இத்தேர்விற்கு எதிராக சென்னையில் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு வரவேற்கத்தக்கது. நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் பதவி நாற்காலிகளையும், சேர்த்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இவ்வாறு உதயகுமார் குற்றம்சாட்டினார்.
இதில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கூடங்குளம் அணு உலையில் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் மக்களுக்கு வீடுகள் கட்டுவதில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை முறைப்படி நடத்த வேண்டும். அணு உலையை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதால் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது :- நீட் தேர்வு என்பது குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இத்தேர்விற்கு எதிராக சென்னையில் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு வரவேற்கத்தக்கது. நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் பதவி நாற்காலிகளையும், சேர்த்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இவ்வாறு உதயகுமார் குற்றம்சாட்டினார்.