சிதிலமடைந்த நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் - வெளியேறுமாறு குடியருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை பிரிவின் மூலம் தவணை முறையிலான சொந்த குடியிருப்புகளும், அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, வழங்கப்பட்ட  குடியிருப்புகளில் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற கோவை வீட்டு வசதிப்பிரிவின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் தவணை முறையில் வழங்கப்பட்ட 960 அடுக்குமாடி குடியிறுப்புகளும், சித்தாப்புதூர் திட்டப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஓதுக்கீடுதாரர்கள் குடியிருந்து வருகின்றனர். 

தற்சமயம், பெறப்பட்ட ஒதுக்கீடுதாரர்கள் தங்களது வீடுகளை முறையாக பராமரிக்காததாலும், கனமழை பெய்து வருவதாலும் சிதிலமடைந்து, குடியிருக்க தகுதியில்லாத நிலையில் உள்ளது. எனவே, மேற்கொண்ட குடியிருப்புகளை காலி செய்துவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்தால் அதனை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இது, தொடர்பாக ஏற்கனவே பலமுறை வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் எச்சரிக்கை நோட்டீஸ்கள் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் மேற்கண்ட குடியிருப்புகளை தாங்களாகவே, காலி செய்யுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அறிவிப்பிற்கு பின்னரும் காலி செய்ய தவறி தொடர்ந்து குடியிருக்க முயற்சி செய்யும் ஒதுக்கீடுதாரர்கள் தங்களது உடமைக்கோ, உயிருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்களே பொறுப்பு என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கோவை பிரிவின் செயற்பொறியாளர்ஃ நிர்வாக அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...