சிதிலமடைந்த நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் - வெளியேறுமாறு குடியருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை பிரிவின் மூலம் தவணை முறையிலான சொந்த குடியிருப்புகளும், அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, வழங்கப்பட்ட  குடியிருப்புகளில் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற கோவை வீட்டு வசதிப்பிரிவின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் தவணை முறையில் வழங்கப்பட்ட 960 அடுக்குமாடி குடியிறுப்புகளும், சித்தாப்புதூர் திட்டப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஓதுக்கீடுதாரர்கள் குடியிருந்து வருகின்றனர். 

தற்சமயம், பெறப்பட்ட ஒதுக்கீடுதாரர்கள் தங்களது வீடுகளை முறையாக பராமரிக்காததாலும், கனமழை பெய்து வருவதாலும் சிதிலமடைந்து, குடியிருக்க தகுதியில்லாத நிலையில் உள்ளது. எனவே, மேற்கொண்ட குடியிருப்புகளை காலி செய்துவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்தால் அதனை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இது, தொடர்பாக ஏற்கனவே பலமுறை வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் எச்சரிக்கை நோட்டீஸ்கள் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் மேற்கண்ட குடியிருப்புகளை தாங்களாகவே, காலி செய்யுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அறிவிப்பிற்கு பின்னரும் காலி செய்ய தவறி தொடர்ந்து குடியிருக்க முயற்சி செய்யும் ஒதுக்கீடுதாரர்கள் தங்களது உடமைக்கோ, உயிருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்களே பொறுப்பு என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கோவை பிரிவின் செயற்பொறியாளர்ஃ நிர்வாக அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...