கோவை ராமநாதபுரம் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது தந்தை வெள்ளலூர் கக்கன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷின் மகன் தினேஷ் தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தான்.
இன்று (09.09.2017) காலை வெள்ளலூர் குளத்தில் குளிப்பதற்காக தினேஷ் சென்றுள்ளான். கடந்த சில தினங்களாக கோவையில் பெய்து வரும் பலத்த மழையால், வெள்ளலூர் குளத்தின் கரைப் பகுதிகள் சேறும், சகதியுமாய் இருந்தன.
இந்நிலையில், கரையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் தினேஷ், கால் தவறி குளத்தில் விழுந்தார். இதையறிந்து. அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள், சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (09.09.2017) காலை வெள்ளலூர் குளத்தில் குளிப்பதற்காக தினேஷ் சென்றுள்ளான். கடந்த சில தினங்களாக கோவையில் பெய்து வரும் பலத்த மழையால், வெள்ளலூர் குளத்தின் கரைப் பகுதிகள் சேறும், சகதியுமாய் இருந்தன.
இந்நிலையில், கரையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் தினேஷ், கால் தவறி குளத்தில் விழுந்தார். இதையறிந்து. அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள், சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.