தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடக்கிறது.
இதில், கலந்து கொள்வதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (09.09.2017) கோவை வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இவரைத் தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியும் மலர்கொத்து கொடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை வரவேற்றார்.

பின்னர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அவருடன் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆளுநரின் இந்த வருகையையொட்டி, கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.