மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த இரண்டு,மூன்று தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால், கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார்.
அப்போது, பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கோபிநாத் வாகனத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கோபிநாத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாலத்தில் இருந்து 100 மீ. தொலைவில் கோபிநாத்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
35 வயதான கோபிநாத் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்கும் பணி செய்து வந்தார். அவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும், கவுதம், பூங்கொடி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதனால், கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார்.
அப்போது, பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கோபிநாத் வாகனத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கோபிநாத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாலத்தில் இருந்து 100 மீ. தொலைவில் கோபிநாத்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
35 வயதான கோபிநாத் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்கும் பணி செய்து வந்தார். அவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும், கவுதம், பூங்கொடி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.