கோவையில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த இரண்டு,மூன்று தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.  

இதனால், கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார்.

அப்போது, பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கோபிநாத் வாகனத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கோபிநாத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பாலத்தில் இருந்து 100 மீ. தொலைவில் கோபிநாத்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 

35 வயதான கோபிநாத் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகிக்கும் பணி செய்து வந்தார். அவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும், கவுதம், பூங்கொடி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...