பௌத்த நாடாக இருக்கின்ற மியான்மாரில் ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக தீவிர பௌத்த வாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்ந்தும் உச்சமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மட்டும் ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3500 பேர் எல்லையை கடந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து, மியான்மரில் உள்ள ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குல் நடைபெற்று வருகிறது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று குன்னூரில் நீலகிரி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஹாஜி. ஜம் ஜம் முபாரக் தலைமை வகித்தார். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி ஜமாத்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலா் பிரண்ட் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

கடந்த சில வருடங்களாக ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக தீவிர பௌத்த வாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்ந்தும் உச்சமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மட்டும் ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3500 பேர் எல்லையை கடந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து, மியான்மரில் உள்ள ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குல் நடைபெற்று வருகிறது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று குன்னூரில் நீலகிரி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஹாஜி. ஜம் ஜம் முபாரக் தலைமை வகித்தார். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி ஜமாத்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலா் பிரண்ட் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.