ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்

பௌத்த நாடாக இருக்கின்ற மியான்மாரில் ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.



கடந்த சில வருடங்களாக ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக தீவிர பௌத்த வாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்ந்தும் உச்சமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மட்டும் ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3500 பேர் எல்லையை கடந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து, மியான்மரில் உள்ள ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குல் நடைபெற்று வருகிறது.



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று குன்னூரில் நீலகிரி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஹாஜி. ஜம் ஜம் முபாரக் தலைமை வகித்தார். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி ஜமாத்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலா் பிரண்ட் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...