வால்பாறை ஸ்டான்மோர் பிரிவில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் சார்பாக 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (07.09.2017) இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதுவரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில், 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த வால்பாறை போலீஸார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர்.

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதுவரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில், 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த வால்பாறை போலீஸார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர்.