ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தம்

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கக் கோரி கோப்மா எனப்படும் பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சிவானந்த காலனி அருகே உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



போராட்டம் குறித்து பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மத்திய அரசின் அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், விவசாயத்திற்கு மூலப்பொருளான பம்ப்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது, அவர்களை மேலும் தற்கொலைக்கு தூண்டும் செயலாக அமைந்துள்ளது. எனவே, வரி விதிப்பின் உச்சவரம்பை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினரின் இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தால், கோவையில் 3,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...