ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தம்

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கக் கோரி கோப்மா எனப்படும் பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சிவானந்த காலனி அருகே உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



போராட்டம் குறித்து பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மத்திய அரசின் அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், விவசாயத்திற்கு மூலப்பொருளான பம்ப்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது, அவர்களை மேலும் தற்கொலைக்கு தூண்டும் செயலாக அமைந்துள்ளது. எனவே, வரி விதிப்பின் உச்சவரம்பை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினரின் இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தால், கோவையில் 3,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...