கோவை மாநகராட்சியில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் இரண்டாம் திட்டத்தில் செயல்பட்டு வரும் பிரதான குடிநீர் குழாயில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்படி நாட்களில் கணபதி, காந்திபுரம், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், காந்திபூங்கா, பாரதிபூங்கா, உக்கடம், புலியகுளம், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.