செப்., 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்- மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் இரண்டாம் திட்டத்தில் செயல்பட்டு வரும் பிரதான குடிநீர் குழாயில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்படி நாட்களில் கணபதி, காந்திபுரம், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், காந்திபூங்கா, பாரதிபூங்கா, உக்கடம், புலியகுளம், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...