கோவை மாவட்டம் சூலூர் அருகே சோமனூரில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில், பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு காவல் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4லட்சம்நிதியுதவி. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ; காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.