ஈரோட்டில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- பதவி ஏற்றதில் இருந்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகின்றார். அவர் கூறுவது அனைத்தும் தவறானது. அ.தி.மு.க.,வில் சபாநாயகருடன் சேர்ந்து 135 எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையுடன் இருக்கின்றோம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனால், தீர்ப்பு தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வந்ததால், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது தான் தங்கள் நிலைப்பாடு. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது, அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- பதவி ஏற்றதில் இருந்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகின்றார். அவர் கூறுவது அனைத்தும் தவறானது. அ.தி.மு.க.,வில் சபாநாயகருடன் சேர்ந்து 135 எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையுடன் இருக்கின்றோம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனால், தீர்ப்பு தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வந்ததால், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது தான் தங்கள் நிலைப்பாடு. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது, அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.