நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஈரோட்டில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தார். 

அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- பதவி ஏற்றதில் இருந்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகின்றார்.  அவர் கூறுவது அனைத்தும் தவறானது.  அ.தி.மு.க.,வில் சபாநாயகருடன் சேர்ந்து 135 எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையுடன் இருக்கின்றோம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது. 



நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனால், தீர்ப்பு தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வந்ததால், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

மேலும்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது தான் தங்கள் நிலைப்பாடு. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின் போது, அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...