மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தனது இல்லத்தில், கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகலறிந்து வந்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவுரி லங்கேஷ் உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி லங்கேஷ் பிரபல கன்னட எழுத்தாளர் லங்கேஷ் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்க முன்பு பகுத்தறிவாளர் எம்.எம். கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 2008.ம் ஆண்டு  பா.ஜ.க. எம்.பி. பிரஹலாத் ஜோஷி மற்றும் பா.ஜ.க. தலைவர் உமேஷ் துஷி ஆகியோர் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர். 

கவுரி லங்கேஷ்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கவுரியின் மரணத்திற்கு கேரளா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பத்திரிகையாளர் லங்கேஷ் கொல்லப்பட்டதில் நிச்சயம் சதி உள்ளது என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...