அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டையடித்து போராட்டம்


நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று சமத்துவ கழகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'மத்திய, மாநில அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வானது ஏழை எளிய மக்களின் படிப்பையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனால் ஏழை மாணவி அனிதா அதிக மதிபெண் பெற்றிருந்தும், மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவை போல யாரும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழக மக்கள் அனைவரும் இதே போல் மொட்டையடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...