அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்பப் பயிற்சி

கோவை மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தற்காப்பு மற்றும் நம் பாரம்பரிய கலையினை அறிந்துகொள்ளும் வகையில் அக்னி சிறகுகள் சார்பில் இலவசமாக சிலம்பம் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.



இதற்கான துவக்க விழா பொள்ளாச்சி அருகே உள்ள சங்கபாளையம் பஞ்சாயத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது, பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர் கார்த்திக் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். 

இத்திட்டம் குறித்து இதன் தலைவர் எம்.பிரபு கூறியதாவது:- பயிற்சியாளர்கள் இந்த பள்ளியின் மாணவர்களுடன் முடிந்தவரை நீண்டகால பயிற்சியினை தொடரவும் மற்றும் எதிர்காலத்தில் மற்ற அரசு பள்ளிகளில் இத்திட்டத்தினை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



இப்பயிற்சிகளுக்கு மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் அதீத ஆர்வத்தினைக் காணும்போது பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.



மாணவர்களின் கல்வி நேரம் பாதிக்கப்படாத வகையில் பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்படும். புத்தகங்கள் மற்றும் ஆய்வுளைத் தவிர மாணவர்கள் இதுபோன்ற செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய பயிற்சிகள் இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இப்பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...