தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் தள்ளிப்போனது. தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதமாகியது.
இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இத்தேர்தலுக்கான அட்டவணையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இத்தேர்தலுக்கான அட்டவணையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.