தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் தள்ளிப்போனது. தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதமாகியது.

இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான அட்டவணையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...