கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை- தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்பு

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. இதில், நேற்று ஒரே நாளில் 92 மி.மீ மழை பதிவானது கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகளை மகிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டியெடுத்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று மாலை சுமார் 7 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், டவுன்ஹால், ரயில் நிலைய சாலை, லங்கா கார்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரேஸ் கோர்ஸ், காந்தி பார்க், அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியது.

நகரின் மத்தியில் உள்ள ரேஸ்கோர்ஸ், ரயில் நிலையம் அருகிலுள்ள லங்கா கார்னர், வடகோவை மேம்பாலம் மற்றும் காட்டூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உக்கடம் அருகே, பாலக்காடு சாலையில், பெரிய குளத்தின் கிழக்குக் கரையை ஒட்டிய பகுதியில் பெருவெள்ளம் சூழந்ததால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

மேலும், சில பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரக் கிளைகள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...