நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சீமான் தெரிவித்தார்.
இதேபோல, கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில். 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்நிலையத்திற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சீமான் தெரிவித்தார்.
இதேபோல, கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில். 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்நிலையத்திற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
