நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - நாம் தமிழர் கட்சி

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சீமான் தெரிவித்தார்.

இதேபோல, கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில். 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 



நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, ரயில்நிலையத்திற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...