நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய ஒரு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், காந்திபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாத மேம்பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதோடு, மேலும் சில மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

மேம்பாலத்தின் மீது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு போலீஸார் வராததால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய ஒரு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், காந்திபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாத மேம்பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதோடு, மேலும் சில மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

மேம்பாலத்தின் மீது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு போலீஸார் வராததால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
