மேம்பாலத்தின் மீது ஏறி ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய ஒரு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், காந்திபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாத மேம்பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



அதோடு, மேலும் சில மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.



மேம்பாலத்தின் மீது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு போலீஸார் வராததால்,  அப்பகுதியில் பதற்றம் நிலவியது.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...