மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டம்


நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட சமூக நீதிகளுக்கான வழக்கறிஞர் குழுவினர், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு ஆதரவாக, கண்ணில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு பேரணி நடத்தினர். செஞ்சிலுவை சங்கத்தை நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியின் போது, நீட் தேர்வால் மாணவியின் உயிரை பறித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



மேலும், நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 



இதனிடையே, அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என தெரியவில்லை என்று கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இந்த பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரான அவர், மருத்துவ மாணவர்களுக்கு எதிராக செயல்படுவது போல, தனது கருத்தை தெரிவிக்கலாமா..? எனவும் சமூக நீதிகளுக்கான வழக்கறிஞர் குழுவினர் கேள்வி எழுப்பினர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...