தியாகத் திருநாளான பக்ரித் பண்டிகை - கோவை மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்



இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் ரமலானுக்கு அடுத்து கொண்டாடும் இரண்டாவது பெருநாள் பக்ரீத் பண்டிகையாகும். 

நபிகள் நாயகத்துக்கு முந்தைய இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் அவர்கள் தவமிருந்து பெற்ற தன் குழந்தையை இறை கட்டளையின்படி பலியிட துணிந்த தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில்தான் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.



இறையச்சம் இருந்தால்தான் இறையின் கட்டளைகளை நிறைவேற்ற இயலும் என்பதை உணர்த்தும் வகையில், இறைவனுக்குப் பிள்ளையைப் பலியிடும் மாபெரும் தியாகத்தைச் செய்ய இறைதூதர் இப்ராஹிம் துணிந்தார். ஆனால், இதனைத் தடுத்த இறைவன், ஆட்டை பலியிட செய்தார் என்றும், அதனடிப்படையில் காலம் காலமாக இஸ்லாமியர்கள் நினைவுகூர்வதே இப்பண்டிகையாகும். 



'ஈதுல் அழ்ஹா' என்னும் தியாகப் பெருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறையின் பெயரால் அறுத்து பலியிட்டு இறைச்சியை அனைவரும் பகிர்ந்துண்ணும் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது.



இந்த நன்னாளை, முன்னிட்டு, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகளில், இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தி இறைவனை வழிபட்டனர். மேலும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் கூறிக் கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...