அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென கூறி, கோவையில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து , சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத மனவிரக்தியில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்த போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத மனவிரக்தியில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்த போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.