கோவை மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திமுக சார்பில் முற்றுகைப் போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு, குப்பை வரி, குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வைப்புத் தொகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள், திமுக-வினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி-யைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், டி.பி.சுப்பிரமணியம், உமா மகேஸ்வரி, நந்தகுமார், வடவள்ளி சண்முகசுந்தரம், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி , கே.எம்.சுந்தரம், குறிச்சி பிரபாகரன், வெ.ந.உதயகுமார், வி.பி.செல்வராஜ், புதூர் மணி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...