ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லை- உயர் நீதிமன்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 

அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று தெரிவித்தது. இதற்கு லாரி, டேக்சி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 1) இந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வர இருந்தது. 

இதனிடையே, லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சுகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி "வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும், இதனால் பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் ஏற்படும் என்றும்" அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...