தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இருவார கால தூய்மை விழிப்புணர்வு நிறைவு நாள்

ரயில் நிலையங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களை தூய்மையாக பராமரிக்கவும், ரயில் பயணிகள் மற்றும் இதர ரயில் உபயோகிப்பாளர்களிடையே அவ்வாறு தூய்மை மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய ரயில்வே நாடெங்கிலும் 16.08.2017 முதல் 31.08.2017 வரையிலான இரு வாரகாலத்திற்கு சிறப்பு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது. 



தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் இந்த கால கட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் சேலம் கோட்ட அதிகாரிகளும் ஊழியர்களும், பல்வேறு தூய்மை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழச்சிகளை தூய்மை விழிப்புணர்வு நாள், தூய்மை பிரச்சார நாள், தூய ரயில்நிலைய நாள், தூய ரயில்பெட்டிகள் நாள், தூய ரயில் உணவு நாள், தூய ரயில் குடிநீர் நாள், தூய கழிப்பறை நாள், போன்ற பல்வேறு விதங்களில் மேற்கொண்டனர். 









இந்நிகழ்வுகளில் சேலம் கோட்டத்தின் ரயில்நிலையங்களான சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகமண்டலம், திருப்பத்தூர், மொரப்பூர், ஆத்தூர், சின்னசேலம், சேலம்டவுன், போன்ற இடங்களில் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோருடன் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டன. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தூய்மை பராமரிப்பு மற்றும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், ரயில் நிலையங்களை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...