குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.5 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீட்டர் தடுப்புச்சுவர் பணியினையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 200 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



மேலும் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தைமலை கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் 1.1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ஆடர்லி முதல் செம்புகரை வரை ரூ.4.23 கோடி மதிப்பில் 4.1 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் சாலை பணியினையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலூர் ஒசாட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.23.990 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலை பணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பில் உபதலை பகுதியில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ.14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...