கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது நண்பர்களுடன் இன்று காலை திருப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கார் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த நிலையில், கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் அருகே நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனிருந்த மூன்று பேர் படுகாயங்களுடன் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.