தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஜவஹிருல்லா, தலைவர்-மனித நேய மக்கள் கட்சி


ஆளுநர் வித்யாசாகர்   ராவ்வை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் சந்தித்து  சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்தார்.

மியான்மர் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், அம்னிஸ்டி சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக மியான்மர் ராணுவம் ரோகிந்தியா பகுதியில் முஸ்லீம்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சுவான் சுகி மியான்மருடைய அதிபராக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இனப்படுகொலைகள்

நடத்தப்படுவதாகவும், சர்வதேச நாடுகள் இந்த படுகொலைகள் குறித்து அமைதிகாத்து வருவதாக கூறியவர், இந்தியா அரசு உடனடியாக மியான்மரை கண்டிக்க வேண்டும் என்றவர் மியான்மர் உடனான தூதரகத்தை திரும்பபெறவேண்டும் என்றார். மேலும்.இது குறித்து ஐ நா மனித உரிமை அமைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜவஹிருல்லா தெரிவித்தார். 

இன்று காலை திமுக, சிபிஎம், விடுதலை. சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக பொறுப்பு  ஆளுநரை பார்த்து சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும்  எடப்பாடி அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை  நடக்க உத்திரவிட கூறியதாக தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காகவும், அரசியல் அமைப்பை காப்பதற்காகவும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...