அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது ஆளுநரின் பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என துரைமுருகன் பேட்டி


அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் உட்கட்சி தகராறு அதில் தலையிட முடியாது என கவர்னர் சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவில் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் தனி தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர் எனவும், ஒ.பி.எஸ் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் வெளியேறிய போது மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர் தற்போதைய சூழ்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இது உட்கட்சி தகராறு தலையிட முடியாது என சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என தெரிவித்தார்.

ஆளுநர் மெளனம் சாதிப்பதற்கு உள்நோக்கம் எதுவும் இருக்கின்றதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், மத்திய அரசின் தலையீடு இல்லாமல் ஆளுநர் செயல்பட மாட்டார் எனவும் தெரிவித்தார். ஆளுநர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என தெரிவித்தவர் தனக்கு கவர்னர் மீது இன்னமும் நம்பிக்கை இருப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...