ஜி.எஸ்.டி வரியை குறைக்காவிட்டால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் - கோவை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் குமுறல்

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் படி, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு குறுந்தொழில் முனைவோர் அதிகமான வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் புதிய வரிக் கொள்கையால் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் 54% வரை வரி கட்ட வேண்டிய சூழல் உள்ளது என்றும், வரியை குறைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். 



இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வரிக்கொள்கையால், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அளவுக்கு அதிகமான வரி செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வரிக்கொள்கையால் சிறு தொழில் முற்றிலுமாக நலிவடைந்து விட்டது. 

பம்ப்செட் தொழிலில் மூன்று விதமாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுறது. மூலப்பொருட்களை வாங்கும் போது 18 முதல் 28 சதவிதம் வரி செலுத்த வேண்டியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு 18 சதவித வரியும், பம்ப் செட் விற்பனை செய்யும் போது 12 சதவித வரியும் செலுத்த வேண்டியுள்ளது.

ஆக, 54 சதவிதம் வரை நாங்கள் வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இத்தகை வரியால், பம்ப் செட் உற்பத்தியாளர்களால் தொழில் செய்ய முடியாது.

கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பம்ப் செட் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். வரிக் கொள்கையினால் பலர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலை நீடித்தால், வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்வதப்போல், பம்ப் செட் உற்பத்தியாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் வரும். 

எனவே, வரும் ஜி.எஸ்.டி கூட்டத்திலாவது பம்ப் செட்க்கு 5% விற்பனை வரியினை மட்டும் விதிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், வரும் 8ம் தேதி கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...