நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகதிற்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம்
இழைத்து விட்டதாக கூறி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா
அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார்
கைது செய்தனர்.

மருத்துவ கல்வி சேர்கையில் மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வுவிலிருந்து விலக்கு அளிக்க கோரி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியது. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய மத்திய அரசு அவசர சட்டதிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என வழக்கு விசாரணைக்கு வந்த போது தெரிவித்தது.
இது தமிழக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மிக பெரும் துரோகத்தை இழைத்து விட்டதாக கூறியும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை எனக் கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியனர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ கல்வி சேர்கையில் மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வுவிலிருந்து விலக்கு அளிக்க கோரி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியது. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய மத்திய அரசு அவசர சட்டதிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என வழக்கு விசாரணைக்கு வந்த போது தெரிவித்தது.
இது தமிழக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மிக பெரும் துரோகத்தை இழைத்து விட்டதாக கூறியும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை எனக் கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியனர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.